Skip to main content Skip to footer

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது நீதி நிலைநாட்டப்படுவதை தாமதிக்கும்: அனுராதா மிட்டால் எச்சரிக்கை

March 20, 2017
Source
samakalam.com

ஐ நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு வெறுமனே கால அவகாசத்தை வழங்குவது நீதிக்காக ஏற்கனவே பல வருடஙகள் காத்திருப்பவர்களுக்கு அதனை மேலும் தாமதிக்கும் என்று கலிபோர்னியாவின் ஓக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்து ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுவரும் ஓக்லாந்து நிறுவனம் இன்று திங்கட்கிழமை “மறுக்கப்பட்ட நீதி : இலங்கையில் மீள்குடியேற்றம், இராணுவநீக்கம் மற்றும் மீள்நல்லிணக்கம் ஆகியவற்றின் மெய்நிலை அறிதல்” என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சமகளம் இணையத்தளத்துடன் மேலதிக தகவல்களை பகிர்ந்துகொண்டபோதே அனுராதா இவ்வாறு தெரிவித்தார்.